திருவாரூர், ஜன.5 - ஊரக வளர்ச்சித் துறையில் நீண்ட காலமாக நிலு வையிலுள்ள 18 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்ற கோரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவ லர்கள் சங்கத்தின் மாவட்ட மையம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் என்.வசந்தன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் டி.ஜெ. அமர்நாத் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கே.எஸ்.செந்தில், மாநில செயற்குழு உறுப்பினர் டி.ராஜசேகரன், ஓய்வூதியர் சங்கத்தின் மாநில தணிக்கையாளர் எஸ்.புஷ்பநாதன், சிஐடியு மாவட்ட தலைவர் எம்.கே.என்.அனிபா ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். மாநிலச் செயலா ளர் ஐ.ஐம்ரூத் நிஷா கண்டன உரையாற்றினார். அனைத்து நிலை காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். அவுட்சோர்சிங் நியமன முறையை கைவிட வேண்டும். கிராம ஊராட்சி செய லர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை ஊதியம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, ஈட்டா விடுப்பு, வரை யறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து கோரிக் கைகளையும் நிறைவேற்ற வேண்டும். பணி மேற்பார்வையாளர் மதிப்பீடு உச்ச வரம்பினை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். 7 ஆண்டு கள் பணி முடித்துள்ள அனைத்து பணி மேற்பார்வை யாளர்களையும் இளநிலைப் பொறியாளராக பதவி உயர்த்த வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் மீது திணிக்கப்பட்டு வரும் பிற துறை பணி களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.