புதுக்கோட்டை, ஜூன் 21-
ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை திட்டப் பணிகள் குறித்து, அத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார், ஆணையர் மரு. தாரேஸ் அஹமது ஆகியோர் செவ்வாயன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சமையல் கூடம் கட்டும் பணி, முதல்வரின் கிராம சாலைகள் மேம் பாட்டுத் திட்டம், சமத்துவபுரம் புனரமைத்தல், பள்ளி கள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதி, குடிநீர் திட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர் சந்தோஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா உள் ளிட்டோர் பங்கேற்றனர்.