மயிலாடுதுறை, மார்ச் 4 - இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மயிலாடுதுறை மாவட்டத் தலைவரும், தீக்கதிர் நாளிதழின் நீண்ட கால முகவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினருமான ஆர். ரவீந்திரன் அண்மையில் மறைந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவரது படத்திறப்பு மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை யில் நடைபெற்றது. கட்சியின் மயிலாடு துறை நகரச் செயலாளர் டி.துரைக் கண்ணு, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆர்.ரவீந்திரன் உருவப்படத்தை திறந்து வைத்து உரை யாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி. குமார், வாலிபர் சங்க மாநிலச் செயலா ளர் ஏ.வி.சிங்காரவேலன், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், ஜி. ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப.மாரி யப்பன், டி.சிம்சன், ஏ.ரவிச்சந்திரன், ஜி. வெண்ணிலா, சி.விஜயகாந்த், கே.பி.மார்க்ஸ், மயிலாடுதுறை ஒன்றியச் செய லாளர் டி.ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர் புகழுரையாற்றினர். ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தி னர், வாலிபர், மாதர், மாணவர் சங்கத்தி னர் தோழர் ஆர்.ரவீந்திரன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.