districts

img

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்

மின்வாரிய ஊழியர்கள் வலியுறுத்தல் திருச்சிராப்பள்ளி, அக்.7 - தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேசன் திருச்சி மண்டல கூட்டம் மத்திய பேருந்து நிலை யம் அருகில் சனிக்கிழமை நடை பெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித் தார். மாநிலத் தலைவர் மணிகண்டன், பொதுச் செயலாளர் சேக்கிழார் ஆகி யோர் சிறப்புரை ஆற்றினார். மின் வாரியத்தில் உள்ள 56 ஆயிரம்  காலிப் பணியிடங்களை நிரப்ப வேண் டும். தேர்வு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள 5387 கேங்மேன்களை பணி நிய மனம் செய்ய வேண்டும்.  கேங் மேன் களுக்கு சொந்த மாவட்டத்திற்கு மாறு தல் உத்தரவு வழங்கி, கள உதவியா ளர் என பதவி மாற்றம் செய்ய வேண்டும்.  பத்து வருடத்திற்கு மேல் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி  நிரந்தரம் செய்ய வேண்டும். முதற்கட்ட மாக தின ஊதியம் ரூ587-ஐ வாரியமே நேரடியாக வழங்க வேண்டும். 1.12.2019 முதல் 16.5.2023 வரையி லான காலத்தில் பணியில் சேர்ந்த  12,000 பேருக்கு 6 சதவீத ஊதிய  உயர்வு வழங்க வேண்டும். பொது மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்றிய அரசின் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் திருச்சி, புதுக் கோட்டை, பெரம்பலூர் மாவட்டங் களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருச்சி பெருநகர வட்ட தலைவர் சத்திய நாராயணன் நன்றி கூறினார்.