பெரம்பலூர், மே 20 - பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சித்தளி கிழக்கு பகுதியைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திங்களன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகத் திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், “எங்களது சித்தளி கிராம கிழக்கு பகுதியின் அருகில் உள்ள இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் குன்னம் வட்டாட்சியர் ஆய்வு செய்ய வந்தார். அப்போது தான் அந்த இடத்தில் கிரஷர் அமைக்க உள்ளது தெரிய வந்தது. கிராமத்தை ஒட்டியே கிரஷர் துவங்கினால் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். மேலும் கிரஷர் மூலம் வரும் புகை மற்றும் மாசுகளின் காரணமாக கிராம மக்க ளுக்கு நோய்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு விவசாயத்திற்கு இடையூறாகவும் சுற்றுப் புற தூய்மை கேடு அதிகமாகவும் வாய்ப்புள் ளது. எனவே மாவட்ட ஆட்சியர், எங்கள் கிரா மத்தின் மீதும் கிராம மக்களின் மீதும் கருணை கூர்ந்து, மேற்கண்ட இடத்தில் கிரஷர் அமை வதை தடுக்க வேண்டும்” என தெரிவித் துள்ளனர். உரிய விசாரணை நடத்தப்படும் என தெரி வித்த பின் அவர்கள் கலைந்து சென்றனர்.