நகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு மதுரை, பிப்.12- சிவகங்கையைச் சேர்ந்த அரசு சோமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்தி ருந்தார். அதில், “காரைக்குடி வறட்சி யான மாவட்டம். கடந்த 80 ஆண்டுகளாக சம்பை ஊற்று எனும் இயற்கை ஊற் றையே காரைக்குடி நகராட்சியினர் சார்த் துள்ளனர். குடிநீர் தேவை பூர்த்தி செய்வ தற்காக மூன்று ஆழ்குழாய் கிணறுகள் தேவகோட்டை பகுதியில் அமைக்கப் பட்டுள்ளன. காரைக்குடியில் சேகரிக்கப் படும் அனைத்து திடக்கழிவுகளையும் இப்பகுதி நிலத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவ தோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் அதி கமாக உள்ளது. அதோடு குடிநீர் தேவை யை பூர்த்தி செய்வதற்காக அமைக் கப்பட்ட ஆழ்துளை கிணற்று நீர் மாசுபட்டு, பயன்படுத்துவதாக இல்லை. எனவே இந்த குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என கூறி யிருந்தார். இந்த வழக்கு புதனன்று தலைமை நீதி பதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி லட்சுமி நாராய ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அதையடுத்து நீதிபதிகள், “காரைக்குடி நகராட்சி ஆணையர் குப்பை கிடங்கை வேறு எங்கு மாற்றலாம்? அந்த இடம் எவ் வளவு தொலைவில் உள்ளது? தற்போ தைய நிலை என்ன? என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வியாழனன்று ஒத்திவைத்தனர்.