பெரம்பலூர், மார்ச் 21 - மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண்நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட கூட்டணி கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 40 வயதான அருண்நேருவிற்கு தீபிகா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். எம்.எஸ் படித்துள்ள அருண்நேரு லால்குடி பகுதியில் விவசாயம் மற்றும் அரிசி ஆலை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அருண்நேருதான், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட போகிறார் என்று கூறிவந்த நிலையில், தற்போது திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து, இவர் மார்ச் 22 (வெள்ளிக்கிழமை) அன்று மதியம் 12 மணியளவில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான க.கற்பகத்திடம் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.