districts

சுரங்கப்பாதை அமைக்க மக்கள் கோரிக்கை அநாகரிகமாக பேசிய ஜெயங்கொண்டம் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி மனு

அரியலூர், ஆக.7-

      அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் குறுக்கு ரோடு அருகே விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலைப் பணிகள் நடைபெறுகின்றன.

     இதில் சுண்டிப்பள்ளம் அரசு நடுநிலைப்  பள்ளி அருகே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, குறுக்கு ரோடு  சாலை மேம்பாலத்தின் கீழ், போலீசாரின் அனுமதி பெற்று பொதுமக்கள் ஆர்ப்பாட்  டம் நடத்தினர். மேலும் குறுக்கு ரோடு ஹெலன் கெல்லர் பள்ளிக்கும் மேம்பாலம் அல்லது சுரங்க பாதை அமைக்க வேண்டு மென வலியுறுத்தப்பட்டது.

   இதுகுறித்து, மேல்மட்ட குழுவிற்கு தக வல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக, வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையின் போது அதிகாரிகள் தெரி வித்தனர். ஆனால், மேல்மட்ட குழுவிற்கு தகவல் தெரிவிக்காமலேயே, அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு சாலை அமைக்கும் பணியை தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர்.  

   இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரி வித்து மீன்சுருட்டி காவல் நிலையத்தில் அனுமதி பெற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த ஜெயங்  கொண்டம் காவல் ஆய்வாளர் ஜெகன்நாத் (பொ) போராட்டம் நடத்தியவர்களிடம் அநாகரிகமாக பேசியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர் மீது துறைரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்  றும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஜெயங்கொண்டம் காவல் நிலையம் முன்பு  போராட்டம் நடத்தப் போவதாகவும் அறி வித்தனர்.  

    ஆர்ப்பாட்டத்தை சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார். தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    காவல் ஆய்வாளர் ஜெகன்நாத் மீது  துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் டிஎஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட டிஎஸ்பி, இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.