தஞ்சாவூர், ஜன.14- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்தில் தற்போது உள்ள, சேது பாவாசத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட நாடியம், மரக்காவலசை, சேதுபாவா சத்திரம் ஆகிய கிராமங்களை வரு வாய் வட்டம் மாற்றம் செய்வதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். இது தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போ ராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. இந்நிலையில், பேராவூரணி வட்டாட் சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தெய்வானை தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. சேது பாவாசத்திரம் காவல்துறை ஆய்வா ளர் ஜெயமோகன், உதவி ஆய்வாளர் பெத்தபெருமாள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலு வலர்கள் மற்றும் கிராம மக்கள் தரப்பில் 15 பேர் கலந்து கொண்டனர். இந்த அமைதி பேச்சுவார்த்தை யில், பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட நாடியம், மரக்காவலசை, சேதுபாவா சத்திரம் ஆகிய கிராமங்களை பேரா வூரணி வட்டத்திலிருந்து மாற்றம் செய்து, புதிதாக உருவாக்கப்பட உள்ள தாக தெரிவிக்கப்பட்ட அதிராம்பட்டி னம் வட்டத்தில் இணைப்பதற்கு மூன்று ஊராட்சிகள் சார்பில் கடும் ஆட்சே பணை தெரிவிக்கப்பட்டது. வருவாய் வட்டம் மாற்றம் தொடர் பான அறிவிப்பினை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகை யில் முறையாக விளம்பரப்படுத்த வேண்டும். கருத்து கேட்புக்கூட்டம் நடத்த வேண்டும் என கிராமத்தினர் தெரிவித்தனர்.
பேராவூரணி வட்டாட்சியர் தெய் வானை கூறுகையில், “பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட நாடியம், மரக்காவ லசை, சேதுபாவாசத்திரம் ஆகிய கிரா மங்களை பேராவூரணி வட்டத்தி லிருந்து மாற்றம் செய்து, புதிதாக அதி ராம்பட்டினம் உருவாகும் பட்சத்தில், அதில் இணைப்பதற்கு தற்போது வெளியிடப்பட்ட விளம்பர அறிவிப்பா னது, பொது மக்களிடமிருந்து கருத்து கேட்பதற்காகவே செய்யப்பட்டது. கிராமங்களை வருவாய் வட்டம் மாற்றம் செய்வது தொடர்பாக, அரசிட மிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை. அவ்வாறு அரசிட மிருந்து முறையான அறிவிப்பு வரும் பட்சத்தில் மூன்று ஊராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் சென்றி டும் வகையில் முறையாக விளம்பர அறிவிப்பு செய்யப்படும். மேலும், மூன்று கிராம பொது மக்களின் எதிர்ப்பு தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப் படும்” என்றார். இதையேற்று, சாலை மறியல் போராட்டம் கைவிடப்படுவதாகவும், அதிராம்பட்டினத்தை புதிய வட்டமாக அறிவித்து, மூன்று கிராமங்களையும் அத்துடன் இணைக்க முயற்சி செய் தால், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும். மூன்று கிராமங்களும் எப்போதும் போல, அருகில் உள்ள பேராவூரணி வட்டத்திலேயே தொ டர்ந்து இயங்க வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர்கள் பாமா செந்தில்நாதன், சாகுல் ஹமீது மற்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.