districts

img

ஊதியத்தை உடனே வழங்கக் கோரி அவுட்சோர்சிங் ஊழியர்கள் போராட்டம்

திருவாரூர், ஜூலை 12 - சிஐடியு அவுட்சோர்சிங் ஊழியர் சங்கம்  சார்பில் மாத ஊதியம் வழங்காத கிரிஸ்டல்  (Krystal) ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்தும்,  மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை கண்டித் தும் திடீர் வேலை நிறுத்தம் நடைபெற்றது. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிரிஸ்டல் (Krystal) நிறு வனம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் பணியாற்றி வருகின்றனர். மாதந்தோறும் 6 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும் நிலையில், 12 தேதி ஆகியும் சம்பளம் வழங்காததை கண்டித்து காலை முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். உடனே ஊதியம் வழங்க வேண்டும். இல்லையெனில் ஊதியம் வழங்கும் வரை பணிகளை மேற்கொள்ளப் போவதில்லை என அவுட்சோர்சிங் ஊழியர் சங்க (சிஐ டியு) ஊழியர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனை முன்பு காலவரை யற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தூய்மைப் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன.