பெரம்பலூர் அக். 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பதாவது மாவட்ட மாநாடு டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் பெரம்பலூரில் நடைபெற உள்ளது. மாநாட்டை சிறப் பாக நடத்துவதற்கான வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் அலுவலகத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமை வைத்தார். மாநில குழு உறுப்பினர் சாமி. நடராஜன் கலந்துகொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோ சனை வழங்கினார். மேலும் மாநாட் டைக் குறித்து மாவட்ட செயலாளர் ரமேஷ் விளக்க உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகஸ்டியன், கலைய ரசி, ரங்கநாதன், ஏ.கே. ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நடைபெற விருக்கும் மாநாட்டைக் குறித்து பேசினர். மாவட்ட குழு உறுப்பினர்கள், ஒன்றிய, வட்டச் செயலாளர்கள், பெரம்ப லூர் நகரச் செயலாளர், கட்சி நிர்வாகி கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.