தஞ்சாவூர், செப்.3 - தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்பு கள் தானமாக பெறப்பட்டன. உடல் உறுப்புகள், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி யைச் சேர்ந்தவர் தருண் (13). இவர் கடந்த ஆக.29 அன்று பட்டுக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அந்த வழி யாக வந்த நான்கு சக்கர வாகனம் மோதியதில் காயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறு வன் மூளைச்சாவு அடைந் தார். இதையடுத்து மருத்து வர்கள், சிறுவனின் பெற் றோர், உறவினர்களிடம் உடல் உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்பு, சிறுவ னின் குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் தெரிவித்தனர். இந்நிலையில், மூளைச் சாவு அடைந்த சிறுவனின் சிறுநீரகம், கல்லீரல், தோல் உள்ளிட்ட உறுப்புகள் எடுக்கப்பட்டு, சிறு நீரகம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கும், கல்லீரல் திருச்சி தனியார் மருத்துவ மனைக்கும், தோல் மதுரை தனியார் மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த சிறுவனின் உட லுக்கு அரசு சார்பில் தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜி நாதன், நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், கண்கா ணிப்பாளர் ராமசாமி மற்றும் மருத்துவர்கள் மரியாதை செலுத்தினர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் இதுவரை மொத்தம் 15 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.