districts

குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது!

கரூர், ஜூன் 30 - அரசு மதுக் கடையை பொது மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியக் குழு கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து கட்சியின் குளித் தலை ஒன்றியச் செயலாளர் இரா. முத்துச்செல்வன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்தி ருப்பதாவது: கரூர் மாவட்டம் குளித்தலை நக ரம் திருச்சி சாலையில் உள்ள மிகப் பெரிய நகரமாகும்.  பெரம்பலூர், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை, மதுரை, மணப்பாறை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட முக்கிய நக ரங்களுக்கு செல்வதற்கு குளித்தலை  நகரத்தில் இருந்து தான் சாலைகள் பிரிந்து செல்கின்றன. இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. மேலும் கரூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பணிகள் காரணமாக சென்று வருபவர்களுக்கு, குளித் தலை சுங்ககேட் பேருந்து நிறுத்தம் மிகவும் முக்கியமான இடமாக உள்ளது.  திருச்சி - கரூர் சாலையில் உள்ள  சுங்ககேட் பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும் பகுதியில் அரசு மதுக்கடை செயல்பட்டு வரு கிறது (கடை எண்.4922). இந்த டாஸ்மாக் இருக்கும் பகுதியில் அதிக மாக சட்டம் - ஒழுங்கு பிரச்சனை நடக்கிறது. சமீபத்தில் இந்த கடை யில் கொலை சம்பவம் நடை பெற்றது. இதனைத் தடுக்க சென்ற உதவி ஆய்வாளருக்கு கத்தி குத்து  ஏற்பட்டது. இதுபோன்ற தாக்குதல்கள் நிகழ்கிற இந்த டாஸ்மாக் கடையை, ஊருக்கு வெளியே இடமாற்றம் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியக் குழு தொடர்ந்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது.  இந்த டாஸ்மாக் கடையை ஊருக்கு வெளியே இடமாற்றம் செய் வார்கள் என நினைத்தால், கரூர்- திருச்சி சாலையில் இருந்து, சுமார்  நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வாழும் குடியிருப்பு பகுதியில், குறிப் பாக பெண்கள் பொது கழிப்பிடம் இருக்கும் இடத்திற்கு அருகில் இட மாற்றம் செய்வதற்கான அனைத்து  ஏற்பாடுகளையும் டாஸ்மாக் மாவட்ட  நிர்வாகம் எடுத்து வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றிய குழுவிற்கு தகவல் தெரிய வந்துள்ளது.  இந்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றி யக் குழு வன்மையாக கண்டிக்கிறது.  எனவே தமிழக அரசும், கரூர் மாவட்ட  நிர்வாகமும் உடனடியாக மக்கள் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையை இடம் மாற்றுவதை தடுத்து  நிறுத்த வேண்டும். அந்த டாஸ்மாக் கடையை குளித்தலை நகரத்தின் வெளிப் பகுதியில் மாற்ற உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் எதிர்ப்பை மீறி மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் குடி யிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையை  கொண்டு வந்தால், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றிய  குழு சார்பில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.