districts

img

அங்கன்வாடி மையங்களை மூடுவதற்கு எதிர்ப்பு

புதுக்கோட்டை, செப்.14-  அங்கன்வாடி மையங்களை மூடுவதைக் கைவிட வேண்டு மென வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில்  வியாழக்கிழமை புதுக்கோட்டை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்  பாட்டத்திற்கு  சங்கத்தின் மாவட்டத்  தலைவர் எம்.விஜயலெட்சுமி தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஏ.சி.செல்வி, சிஐடியு மாநி லச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, சுங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.தேவமணி.  மாவட்டப் பொரு ளாளர் எஸ்.சவரியம்மாள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வர்கள், “பல வருடங்களாக உள்ள  காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். குழந்தைகளின் ஊட்டச்சத்து, கர்ப்பிணிப் பெண்  கள், மற்றும் பாலூட்டும் தாய்மார களின் நலன்கருதி அங்கன்வாடி மையங்களை மூடுவதைக் கைவிட  வேண்டும். தேர்தல் பணிகளான வாக்குச்சாவடிப் பணிகளை பார்க்கச் சொல்லி அங்கன்வாடி  ஊழியர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அங்கன்வாடி மையங்க ளில் கேமரா பொருத்துவதைக் கைவிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை உயர் அதிகாரிகள் வீடுகளில் வேலைகளில் ஈடு படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலை வர் வி.பேபி, மாவட்டடச் செயலா ளர் சி.லதா, சகிலா பானு, சா.பர மேஸ்வரி, ப.சுதா, சிஐடியு மாவட்டத் தலைவர் ரெ.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.