districts

img

இலங்கை தமிழர் குடியிருப்புகள் திறப்பு

திருச்சிராப்பள்ளி, செப்.17 - தமிழ்நாடு முழுவதும் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.79.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1591 குடியிருப்புகளை, வேலூர் மாவட்டம், மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று திறந்து வைத்தார். இதையொட்டி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம், வாழவந்தான்கோட்டை ஊராட்சியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் மண்டல தனித்துணை ஆட்சியர் (பொ) தவச்செல்வம், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சங்கரஜோதி, ஒன்றியக் குழுத் தலைவர் சத்யா கோவிந்தராஜ், ஊராட்சி மன்றத்தலைவர் சின்னம்மாள் தேவராஜ், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.