புதுக்கோட்டை, ஜூலை 22 - தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டம் பாலன்நகர் மற்றும் கறம்பக்குடி பிலாவிடுதி திட்டப் பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை முதல மைச்சர் திங்களன்று தலைமைச் செயல கத்தில், காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கறம்பக்குடி பிலாவிடுதியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சி யர் மு.அருணா தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு அமைச்சர் தெரிவிக்கையில், ஏழை, எளிய பொதுமக்களும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத் தில் பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அந்த வகை யில் பொதுமக்களுக்கு அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.541. 32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,184 புதிய அடுக்குமாடி குடியிருப்பு களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்களன்று திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 382 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1459 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் ஆகியவற்றை யும் திறந்து வைத்தார். அதன்படி திங்களன்று புதுக் கோட்டை மாவட்டம், பாலன்நகர் பகுதி-2 திட்டப் பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.23.57 கோடி செலவில், 256 புதிய அடுக்குமாடி குடி யிருப்புகள், கறம்பக்குடி திட்டப் பகுதி யில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.10.50 கோடி செலவில் 96 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகளில் ஒவ்வொரு குடியிருப்பும், வசிப்பறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை மற்றும் கழிப் பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளு டன் கட்டப்பட்டுள்ளன. குடியிருப்பு களுக்கு போதுமான காற்றோட்ட வசதி, தண்ணீர் வசதி, ஆழ்துளை கிணறுகள், கீழ்நிலை தண்ணீர் தொட்டிகள், மழை நீர் வடிகால், பேவர் பிளாக் நடைபாதை மற்றும் கழிவுநீர் தேக்கத் தொட்டிகள் ஆகிய வசதிகளும் உள்ளன. இக்குடியிருப்புகளை பயன்படுத் தும் பொதுமக்கள், இதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, வட்டாட்சியர் ஜபருல்லா, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராமன், அட்மா கமிட்டி தலைவர் முத்துகிருஷ்ணன், பிலாவிடுதி ஊராட்சிமன்றத் தலைவர் விஜயரவி பலவராயர், ஊராட்சிமன்ற துணைத் தலைவர் நித்யா சந்திரசேகர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.