districts

   புதுக்கோட்டையில் ஒரு டன் ரேசன் அரிசி கடத்தியவர் கைது

புதுக்கோட்டை, மே 24 -

     புதுக்கோட்டையில் ஒரு டன் ரேசன் அரிசியைக் கடத்திய நபரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் புதன்கிழமை கைது செய்த னர். குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப்  பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலை மையிலான போலீசார், கறம்பக்குடி புளியஞ்சோலை தெருவில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கறம்பக் குடியைச் சேர்ந்த சின்னையன் மகன் முருகேசன் (45)  என்பவர் ஒரு டன் ரேசன் அரிசியைக் கடத்த முயன்றது  தெரியவந்தது. இதையடுத்து அரிசி மற்றும் வாகனம் பறி முதல் செய்யப்பட்டு, முருகேசன் கைது செய்யப்பட்டார்.