தஞ்சாவூர், ஆக.6- தஞ்சாவூரில் புதை சாக்கடை சீர மைப்பு பணிக்காக திங்கள்கிழமை பள்ளம் தோண்டியபோது மண் சரிந்த தால், இரு தொழிலாளர்கள் சிக்கினர். இதில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். மற்றொருவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் இறந்தவர் குடும்பத் திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் எனக்கூறி உற வினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் பூக்கார விளார் சாலை லாயம் பகுதி ஜெகநாதன் நகரில் புதை சாக்கடையிலிருந்து அடிக்கடி கழிவுநீர் வழிந்து சாலையிலும், சாலையோர வாரியிலும் ஓடியது. இதனால், துர்நாற் றம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் 10 நாள்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் புதை சாக்கடை சீரமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதில் பழைய குழாயை அகற்றிவிட்டு, புதிய குழாய் பதிப்பதற் காக 15 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது. இப்பள்ளத்தில் திங்கள்கிழமை மாலை தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் பகுதி தேவபூமி நகரைச் சேர்ந்த ஜெயநாராயணமூர்த்தி (27), புதுக் கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள வளம்பப்பட்டியைச் சேர்ந்த தேவேந்திரன் (32) ஆகியோர் புதிய குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக மண் சரிந்து இருவர் மீதும் விழுந்தது. தகவ லறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று மற்ற தொழிலாளர்களுடன் இணைந்து இடுப் பளவு மண்ணில் சிக்கியிருந்த தேவேந்தி ரனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மண்ணுக் குள் சிக்கியிருந்த ஜெயநாராயண மூர்த்தியை மீட்பதற்காக 3 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பள்ளம் தோண்டப்பட்டது. தகவலறிந்த, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட் டோர் சம்பவ இடத்துக்குச் சென்று, மீட்புப் பணியை விரைவுபடுத்தினர். இந்நிலையில் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, இறந்த நிலை யில் ஜெயநாராயணமூர்த்தி உடல் மீட்கப் பட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
சிபிஎம் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்
இத்தகவலறிந்து செவ்வாய்க்கிழமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வா கிகள் உயிரிழந்த ஜெய நாராயண மூர்த்தி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். மேலும், மருத்துவ சிகிச்சையில் இருந்து வரும், தேவராஜை சந்தித்து அவரது உடல் நலன் குறித்து விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து தேவநாரா யணமூர்த்தி மனைவி சுகன்யாவுடன் தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு சென்று அவரது உயிரிழப்பிற்கு காரண மாக அஜாக்கிரதையுடன் செயல்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டது. மேலும், உச்ச நீதிமன்ற அறிவுறுத்த லின்படி உயிரிழந்த தொழிலாளி குடும் பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை உடலை பெற்றுக் கொள்ளக் மாட்டோம் என நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இறுதி முடிவு எட்டப் படாத நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. தேவநாராயணமூர்த்தி உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், என்.சர வணன், மாவட்டக்குழு உறுப்பினர் என். குருசாமி, மாநகராட்சி உறுப்பினர் வை ஜெயந்திமாலா முருகேசன், முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் த.முருகேசன், சிபிஎம் தஞ்சை மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், ஒன்றியச் செயலாளர் கே. அபிமன்னன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில நிர்வாகி ஆர். கலைச்செல்வி, மாநிலக் குழு உறுப்பி னர் பி.செந்தில்குமார், மாவட்டத் தலை வர் கே.பன்னீர் செல்வம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ.வசந்தி, மாநகரக் குழு உறுப்பினர்கள், வழக்கறிஞர் எம்.கே. சேகர் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். இறந்த தேவ நாராயண மூர்த்திக்கு சுகன்யா என்ற மனைவியும், இரண்டு வயதில் பெண் குழந்தையும், 8 மாதமே யான ஆண் குழந்தையும் உள்ளனர்.