districts

img

கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் நூறு மரக்கன்றுகள் நடும் விழா

கும்பகோணம்,  மார்ச் 10- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு அறி வியல் இயக்கம், தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றம் மற்றும் எஸ்.புதூர் ஸ்கை வெல் சைன் லைன் சங்கம் இணைந்து உலக மகளிர் தின விழா மற்றும் 100 மரக்கன்றுகள் நடும் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் எஸ்.அகிலா தலைமை வகித்தார். யூத்  ரெட்கிராஸ் திட்ட அலுவலர்  எஸ்.ரேணுகா வரவேற்றார். மாநில தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரிப் பேராசிரியருமான வெ.சுகுமாரன் மகளிர் தின சிறப்புரை ஆற்றினார்.  வலங்கைமான் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை நட்டு, பராமரித்து, மரங்கள் நிறைந்த வனமாக்கிய சாதனைபுரிந்த கும்ப கோணம் பஹோலா மருத்துவமனை மருத்து வர் தமிழ்.தென்றல் பாராட்டி கௌரவிக்கப் பட்டார்.  முதல்வர், பேராசிரியர்கள், விருந்தி னர்கள் சுற்றுச்சூழல் மன்றம், யூத் ரெட்கிராஸ்  மாணவிகள் ஒத்துழைப்புடன் கல்லூரி வளா கத்தில், எஸ்.புதூர் லயன்ஸ் சங்கம் வழங்கிய  100 மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழல்  சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராதா கிருஷ்ணன் நன்றி கூறினார்.