districts

img

தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்

திருவாரூர், செப்.10 - பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக் கூடிய வகையில் உள்ள மாநில முன்னுரிமை என்ற அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் சார்பில் செவ்வாயன்று ஒரு நாள் அடை யாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலு வலகம் எதிரே நடைபெற்ற வேலை நிறுத்தத் தில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 850  அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களில் பணிபுரியும் 3200 ஆசிரியர்கள் பங்கேற் றனர்.  போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.பெ.  ரவி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஈவேரா உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.