திருச்சிராப்பள்ளி, ஜன.31 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றிய குழு சார்பில் முதுபெரும் தலை வர் தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு மற்றும் பேரவை கூட்டம் செவ்வா யன்று பெல் சிஐடியு அலு வலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவெ றும்பூர் தாலுகா செயலாளர் மல்லிகா தலைமை வகித் தார். புறநகர் மாவட்டச் செய லாளர் ஜெயசீலன் தோழர் சங்கரய்யா படத்தை திறந்து வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவ ராஜன், மாவட்டக் குழு, தாலுகா குழு உறுப்பினர் கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். தாலுகா குழு உறுப்பினர் ரவி குமார் நன்றி கூறினார்.