districts

திருச்சி முக்கிய செய்திகள்

சாலை மறியல் அறிவிப்பு எதிராலி பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள்

மன்னார்குடி: மன்னார்குடியில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிருந்தனர். இதற்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மன்னார்குடி ஒன்றியப் பெருந்தலைவர் மனோகரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. முருகையன்,  மாவட்டத்தலைவர் எம்.கே.என்.ஹனிபா, துணைத்தலைவர்கள் ஜி. ரகுபதி, கே.பி.ஜோதிபாசு, உள்ளாட்சிதுறை  ஊழியர் சம்மேளன மாநிலக்குழு உறுப்பினர்  ஏ.பி.டி லோகநாயகி, மாவட்டச் செயலாளர் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம்

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில், பல்வேறு துறை சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளை பரிசோதித்து, அதன டிப்படையில் 25 பேருக்கு அடையாள அட்டை வழங்கப் பட்டது. தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்காக 30 பேர் பதிவு செய்து கொண்டனர்.

ஜேஆர்சி கவுன்சிலர்கள் பயிற்சி முகாம்

கும்பகோணம்: இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையின், கும்பகோணம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் ஜேஆர்சி கவுன்சிலர்க ளுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் கும்பகோணம் அருகே கொரநாட்டுரில் நடைபெற்றது. பள்ளித் தாளாளர் பூர்ணிமா தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில், பள்ளியின் தலைவர் கார்த்திகேயன் ஜேஆர்சி கொடியை ஏற்றி வைத்தார். கும்பகோணம் ரெட்கிராஸ் துணைத் தலைவர் ஆண்ட்ரூ ரொசா ரியோ ஜேஆர்சி நிறுவனர் ஹென்றி டுனான்ட் படத்தைத் திறந்து வைத்தார். நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட கல்விஅலுவலர் (தொடக்கப்பள்ளிகள்) திருநாவுக்கரசு. தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) அமலா தங்கத்தாய், பள்ளி முதல்வர் அம்பிகாபதி, கும்பகோணம் கல்வி மாவட்ட ஜேஆர்சி கன்வீனர் ஜான் ஸ்டீபன்,  கும்ப கோணம் வட்டாரக் கல்வி அலுவலர் இளங்கோவன். ஜேஆர்சி இணை கன்வீனர்கள் காளிதாஸ், செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் கும்ப கோணம் கல்வி மாவட்ட அளவில் 141 பள்ளிகளைச் சார்ந்த 141 ஜேஆர்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 

லயன்ஸ் சங்க தொடக்க விழா

பாபநாசம்: பாபநாசத்தில் கிங்ஸ் லயன்ஸ் சங்க தொடக்க விழா-பணியேற்பு விழா தஞ்சாவூர் கிங்ஸ் லயன்ஸ் சங்கத் தலைவர் ராமச் சந்திரன் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட ஆளுநர் சேது சுப்ரமணியன் சங்கப் பணியை தொடங்கி வைத்தார்.  மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் சவரிராஜ்,  தலைவர் முஹம்மது இப்ராஹிம், செயலாளர் ஆனந்த் காந்தி, பொருளாளர் முஹம்மது பாரூக், மக்கள் தொடர்பு அலுவர் அப்துல் ரவூப் ஆகி யோருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.   முஹமது ரபி,  பார்வை பாதித்தவருக்கு நிதி உதவி, மரக் கன்றுகள், கருணை இல்லத்திற்கு அரிசி மூடை ஆகியவற்றை வழங்கினார். நிகழ்வில், பாபநாசம் லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர்கள் ஆறுமுகம், சம்பந்தம், சாப் ஜான், முத்தமிழ்ச் செல்வம், செயலாளர் நவநீத கிருஷ்ணன்,   ரோட்டரிச் சங்கத் தலைவர் அறிவழகன், செந்தில் நாதன், விவேகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.

விவசாயிகளுக்கு மானிய விலையில் ஜிப்சம்

திருவையாறு: திருவையாறு வட்டாரத்தில் மண் வளத்தை அதிகரிக்க உதவும் ஜிப்சம் உரம் விவசாயி களுக்கு ஏக்கருக்கு 200 கிலோ ரூ.250/ மானியத்தில் வழங்கப்பட்டது. திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா விவசாயிகளுக்கு இடுப் பொருட்க ளை வழங்கிப் பேசினார். அப்போது “ திருவையாறு, மேல திருப்பந்துருத்தி, மன்னார் சமுத்திரம் மற்றும் மரூர் ஆகிய வேளாண் விரிவாக்க மையங்களில் 100 டன் ஜிப்சம் இருப்பு வைக்கப்பட்டு ஒரு விவசாயிக்கு 200 கிலோ விதம் ரூ.250 மானியத்தில் விநியோகம் செய்யப் படுகிறது” என்றார்.  மருர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மரூர், சாத்த னூர் மற்றும் மகாராஜபுரம் ஆகிய மூன்று ஊராட்சி மன்றத் தலைவர்கள் முன்னிலையில் விவசாயிகளுக்கு ஜிப்சம் விநியோகம் தொடங்கி வைக்கப்பட்டது.  இடு பொருள் விநியோகத்திற்கான ஏற்பாடுகளை  வேளாண் மை உதவி  அலுவலர்கள் உமா பிரியா, இளந்திரையன், கவிதா, கிடங்கு மேலாளர் வடிவழகி ஆகியோர் செய்தி ருந்தனர்.

கால்நடைகளுக்கான சிறப்பு முகாம்

பாபநாசம்: பாபநாசத்தை அடுத்துள்ள ராஜகிரியில் தமிழ் நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்புக் கால்நடை சுகாதாரம்- விழிப்புணர்வு முகாம் தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச்செல்வம்  தலைமையில் நடைபெற்றது.  முகாமில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.முஹமது ரிபாயி, பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி,ராஜகிரி ஊராட்சி மன்றத் தலைவர் சமீமா பர்வீன், மண்டல இணை இயக்குநர் (பொ)டாக்டர் பாஸ்கரன்,  கால்நடை நோய் புலனாய்வு உதவி இயக்குநர் டாக்டர்  பழனிவேலு, கால்நடை உதவி மருத்துவர்கள் அய்யம் பேட்டை ஏஞ்சலா சொர்ணமதி, சுந்தரப் பெருமாள் கோவில் கார்த்திகேயன், கணபதி அக்ரஹாரம் சங்கமித்ரா, கால்நடை ஆய்வாளர் சிவசக்தி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மதியழகன், பன்னீர்செல்வம், பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா உட்பட கலந்து கொண்டனர்.  இதில்  மாடு, ஆடு, நாய், பூனை, கோழி ஆகிய வற்றிற்கு பொது சிகிச்சை, தடுப்பூசி, பூச்சி மருந்து, சினை பரிசோதனை. சினை ஊசி, தாது உப்பு வழங்கப்பட்டது.

விரைவில் சீரமைக்கப்படுகிறது திருச்சிராப்பள்ளி - மதுரை சாலை

திருச்சிராப்பள்ளி, பிப்.10- திருச்சிராப்பள்ளி - மதுரை இடையிலான 125 கி.மீ,. சாலைப் பணிகள் ரூ.159 கோடி மதிப்பீட்டில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணையம்  125 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக் கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதைச் செயல்படுத்துவ தற்கான  நிறுவனத்தை தேர்வு செய்யவதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும்.  இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தின்  மூத்த அதிகாரி ஒருவர் கூறுகை யில், இந்த மாதத்திற்குள் டெண்டர் வெளியிடப் படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. “திட்டமிட்டபடி நடந் தால், அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் பணி கள் தொடங்கும்” என்றார். இப்பணி ஓராண்டிற்குள் நிறைவடையும் என்றார். திருச்சிராப்பள்ளி-மதுரை சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கும் பகுதிகளை தேசிய நெடுஞ் சாலைத்துறை ஆணையம் கண்டறிந்துள்ளது.   அடையாளம் காணப் பட்ட இடங்களில் சுரங்கப் பாதை, இலகுரக வாகனங் கள் செல்வதற்கான சுரங்கப் பாதை, அணுகு சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி நகரிலி ருந்து இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் மணி கண்டம் அருகே உள்ள வாக னச் சுரங்கப்பாதை மார்ச் மாதத்திற்குள் போக்கு வரத்துக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

மயிலாடுதுறை,பிப்.10- மயிலாடுதுறை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் கொள்ளிடம் வட்டார அளவில் 18 வயது வரையிலான மாற்று திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் கொள்ளிடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சீர்காழி சட்டமன்ற  பன்னீர்செல்வம் முகாமைத் துவக்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, ஒன்றியப் பெருந்தலைவர்.ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர், மயிலாடுதுறை மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஞானசேகர், மாவட்ட மறுவாழ்வு நல அலுவலர் சீனிவாசன், சீர்காழி மேற்பார்வையாளர் ஜெய்சங்கர், ஆசிரியர் பயிற்றுனர் ஐசக்ஞானராஜ் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட இணைச் செயலாளர் எஸ். பாரதிராஜா, ஒன்றியப் பொருளாளர் கொளஞ்சியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.'

கொள்ளிடத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை 

மயிலாடுதுறை,பிப்.10- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொள்ளிடம் வட்டார அளவில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்,  ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் அருள்மொழி,  வட்டார வளர்ச்சி அலுவலர் ரெஜினாராணி, ஒன்றியக்குழு உறுப்பி னர் அங்குதன், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் பங்கேற்றனர், முருகதாஸ் பேசுகையில், “ இலவச மனைபட்டா வழங்குவது, அரசின் வீடுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு பயனாளிகளை தேர்ந்தெடுத்து அந்தத் திட்டங்கள் அவர்களை விரைந்து சென்று சேரும் வகையில் பாரபட்சம் இன்றி பணியாற்ற வேண்டும் என்றார்

சட்ட விழிப்புணர்வு முகாம்

பேராவூரணி ,பிப்.10- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சென்னை சவீதா சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட, மாணவி களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சென்னை சவீதா சட்டக் கல்லூரிப் பேராசிரியர் டி.அனுராதா தலைமையில், சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் 18 பேர்  பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண்களுக்கான சட்ட உரிமைகள், ஆண், பெண் இனப் பாகுபாடு இருக்கக் கூடாது. எதிர்கால கல்வித் திட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், அதனை  எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கருத்துரையாற்றி னர். தொடர்ந்து பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முதல்வன், பேராவூரணி பேரூ ராட்சித் தலைவர் சாந்தி சேகர், பேரூராட்சி உறுப்பினர் ஹபீபா ஃபாரூக், கல்விப் புரவலர் அ.அப்துல் மஜீது, வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன்,  930 மாணவர்கள்-பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். 

மரக்கன்றுகள் நடும் விழா 

தஞ்சாவூர்,பிப்.10- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், கவின்மிகு தஞ்சை அமைப்பு இணைந்து மூன்றாம் கட்டமாக தமிழ்ப் பல்கலைக்கழக வளாக மகரத் தோரணவாயில் இருபுறங்களி லும் சுமார் 750 மரக்கன்றுகள் நடும் விழா, துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் வனத்துறை மூலம் இலவசமாக வழங்கப்பட்ட சுமார் 2,000 கன்றுகள், ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரக்கன்று வீதம் வழங்கப்பட்டு நடப்பட்டன. நிகழ்வில், தஞ்சை கவின்மிகு அமைப்பின் தலைவர் மருத்துவர் ராதிகா மைக்கேல், மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் இரா.சு.முருகன் மற்றும் கல்வியியல் துறை மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். 

ஊராட்சித் தலைவர் டிஸ்மிஸ்

மயிலாடுதுறை,பிப்.10- கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் ஊராட்சி சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது தொடர்பாக அவர் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் லலிதா அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.