கொள்ளிடம், அக்.6 - கொள்ளிடம் அருகே பழையாறு, புதுப்பட்டினம், தற்காஸ், கலைஞர் நகர், அண்ணாநகர் ஆகிய கடலோரத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாய் கரையில் 6 புதிய கதவணை கட்டும் பணி நடை பெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு, புதுப்பட்டினம், தற்காஸ், கலைஞர் நகர் மற்றும் அண்ணா நகர் ஆகிய கிராமப் பகுதிகளையொட்டி பக்கிங்காம் கால்வாய் செல்கிறது. இதில் கடல் நீர் அதிகளவில் புகும்போது பழையாறு சுனாமி நகர் மற்றும் அப்பகுதி யில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியி ருப்புகளையும், சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ள விளைநிலங்களிலும் உப்புநீர் புகுந்து விடுவது வழக்கமாக உள்ளது. பருவமழை காலங்களில் கடல் சீற்ற மாக இருக்கும் போதும், கடல்நீர் அதிகள வில் கிராமத்துக்குள் புகுந்து சுனாமி நகரைச் சூழ்ந்து விடும். இந்த உப்புநீர் வெளி யேற பல நாட்களாகும். கடல் நீர் உட்புகு வதை தடுக்கும் வகையில் கதவணைகள் அமைக்க வேண்டுமென கடலோரப் பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சார்பில், தொடர்ந்து கோரிக்கை வைக்கப் பட்டு வந்தது. இந்நிலையில், கிராம மக்களின் கோரிக் கைகளை ஏற்று மாவட்ட ஆட்சியர் மகா பாரதி உத்தரவின் பேரில், மயிலாடு துறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறி யாளர் சண்முகம் மற்றும் சீர்காழி செயற் பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் நட வடிக்கை எடுத்து ரூ.1 கோடி மதிப்பில் பக்கிங்காம் கால்வாய் கரையில் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு 6 இடங்களில், ஆறு கதவணைகள் அமைக்கப்பட்டு பணி முடி வுறும் நிலையில் உள்ளது.
இதுவரை பக்கிங்காம் கால்வாய் கரை யில் கதவணை அமைக்காமல் இருந்த தால், கடல்நீர் உட்புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. தற்போது ஆறு இடங் களில் கதவணைகள் கட்டப்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழும் நிலை இருக்காது. விளை நிலங்களிலும் உப்பு நீர் புகாது. மேலும் இதுவரை உப்பு நீராக இருந்து வந்த நிலத்தடி நீர் நன்னீராக மாறும். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கடலோர விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கூறுகையில், “பக்கிங்காம் கால்வா யில் கதவணை அமைக்காமல் இருந்த தால் நாங்கள் மிகவும் அவதிப்பட்டோம். தற்போது, இப்பகுதி மக்களின் கோரிக் கையை ஏற்று, பக்கிங்காம் கால்வாயில் 6 இடங்களில் ஆறு கதவணைகளை புதி தாக அமைத்துக் கொடுத்த மாவட்ட ஆட்சியர், செயற்பொறியாளர், சீர்காழி உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறி யாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், கதவணை அமைக்கப்பட் டுள்ள பக்கிங்காம் கால்வாய் கரையில் 6 கி.மீட்டர் தூரத்துக்கு, கதவணையை உரிய நேரங்களில் சென்று மூடி திறக்கவும், பரா மரிப்பு பணியை மேற்கொள்ளவும் நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், விவசாயிகள் எளிதில் சென்று வரும் வகை யில் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். கதவணை கட்டப்பட்டதால், அப்பகுதி கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்த னர்.