districts

img

அனைத்து பாடங்களுக்குமான மென்பொருளை வடிவமைக்க வேண்டும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஏப். 4 - பிரோடிஜி எஜுகேஷன் நிறுவனத்தின் புதிய மென்பொருள் அறிமுக விழா திருச்சி யில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார்.  பிரோடிஜி எஜுகேஷன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மகாலட்சுமி சதீஷ்  புதிய மென்பொருள் பற்றி செயல்முறை விளக்கம் அளித்தார்.  புதிய மென்பொருளை பள்ளிக் கல்வித்  துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி  வெளியிட்டு பேசுகையில், “கடினமாக  உள்ள கணிதப் பாடத்தை எளிமையான முறை யில் மாற்றி தரவல்ல மென்பொருளை அறி முகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இத்தகைய மென்பொருட்கள் கிடைக்கிற பொழுது கற்றலில் ஆர்வம் அதிகமாக இருக்கும் என  நம்புகிறேன்.  தனியார் பள்ளியாக இருந்தாலும், அரசுப்  பள்ளியாக இருந்தாலும் அனைவரும் மாண வர்கள் நலனுக்காகத்தான் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆகவே வருங்கால சமுதாயத்தினரை மனதில் வைத்து நாம் செயலாற்ற வேண்டும். அவ்வாறு செய்யும் போது எதிர்கால மாணவ சமுதாயம் பயன டையும். கணிதப் பாடத்தை எளிமையாக, விளையாட்டு போல கற்றுக் கொள்ள வடிவ மைத்துள்ளது போல, மற்ற பாடங்களுக்கும் மென்பொருளை வடிவமைக்க வேண்டும்” என்றார்.  நிகழ்ச்சியில், சிபிஎஸ்இ ஸ்கூல் மேனேஜ் மென்ட் அசோஷியேசன் தலைவர் மனோ கரன், செயலாளர் அசோக்குமார், திருச்சி மண்டல செயற்குழு உறுப்பினர் கமலா நிகே தன் சத்தியமூர்த்தி, தனியார் பள்ளிகள் தாளா ளர்கள் சங்க நிர்வாகிகள் பாஸ்கரன், சிங்கப் பாண்டியன், ஜெரால்டு, சீனிவாசன், கவிதா  சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.