இராமநாதபுரம், டிச.16- இலங்கை ஜனாதிபதி மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் பிரச்ச னைக்கு நிரந்தர தீர்வு காண வலி யுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடி தத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: இலங்கை ஜனாதிபதி நம்முடைய நாட்டிற்கு மூன்று நாள் பயணமாக வருகை தந்திருப்பதை அறிந்தேன். இரு நாடுகளுக்கு இடையான நல்லுறவு குறித்து உரையாடும் பொழுது தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப் படும் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை குறித்தும் முன்வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இலங்கை மற்றும் தமிழ்நாடு மீன வர்களின் பிரச்சனை நிரந்தர தீர்வு காணப்படாமல் தொடர்ந்து தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படை யினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், சிறை தண்டனை விதிக்கப்படுவதும், அபராதம் விதிக்கப்படுவதும் என தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே இதற்கான நிரந்தர தீர்வை உடனடியாக காணும் வகையில் இலங்கை ஜனாதிபதி நம்முடைய நாட் டிற்கு வருகை தந்திருக்கும் இத்த கைய தருணத்தில் வலியுறுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில். நட்பு நாடு என்ற அடிப்படையில் பல்வேறு உதவி களை இந்தியா முன்வந்து செய்து கொண்டிருக்கும் நிலையில் இலங்கை அரசு தமிழ்நாடு மீனவர்கள் விஷ யத்தில் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இதற்கான நிரந்தர தீர்வை காணும் வகையில் இருநாட்டு மீனவர்களுக்கு இடையான பேச்சுவார்த்தையை மீண் டும் தொடங்கிடவும், சுமூகமான முடிவு எட்டப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு இராமநாதபுரம் நாடா ளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான கே.நவாஸ்கனி பிர தமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப் பிட்டிருந்தார்.