கரூர், ஜூலை 23 - தேசிய மாம்பழ தின விழா திங்களன்று பரணி கல்வி வளாகத்தில் கொண்டாடப் பட்டது. இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மஞ்சள் வண்ண உடை அணிந்தும் மஞ்சள் நிறப் பொருட்கள் மற்றும் மாம்பழத்துடனும் வந்தனர். தேசிய மாம்பழ தினத்தையொட்டி, குழந்தைகள் மாம்பழத்தின் சிறப்புகள், பயன்கள் மற்றும் அவற்றின் வகைகளை அனைவருக்கும் எடுத்துக் கூறினர். பின்னர் மாணவர்கள் மாம்பழம் பாடல் பாடி, ஆடி மகிழ்ந்தனர். விழாவிற்கு பள்ளியின் தாளாளர் மோகனரெங்கன் தலைமை வகித்தார். செய லர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவ லர் சுபாஷினி அசோக்சங்கர், முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்ரமணியன் மற்றும் முதல்வர்கள் முன்னிலை வகித்தனர்.