districts

img

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

திருவாரூர், ஆக.25 -

      ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் தேசிய அறிவியல் பரிமாற்ற குழு மம் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் ஒருங்கிணைப்பில் ஒவ்வொரு ஆண்டும்  பள்ளி மாணவர்களின் அறிவியல் மனப்பான் மையை வளர்க்கும் விதத்தில் தேசிய குழந்தை கள் அறிவியல் மாநாட்டை நடத்துகிறது.

    இந்த ஆண்டு கருப்பொருளாக “ஆரோக் கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்ளுதல்” எனும் தலைப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. நடைபெறு கிற 31 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு பள்ளி மாணவர்கள் ஆய்வறிக்கை  தயார் செய்யும் வகையில் வழிகாட்டி ஆசிரி யர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

    திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகா மிற்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத்  துணைத் தலைவர் முனைவர் எம்.வி.பாலசுப்ர மணியன்  தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.எஸ்  ஸ்டீபன்நாதன் மாநாட்டு நோக்கம் குறித்து உரை யாற்றினார்.

    திருவாரூர் வட்டாரக் கல்வி அலுவலர் ஜி. இளங்கோவன் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் பி.சங்கரலிங்கம் மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.கே. சரவணராஜன், கடலூர் மாவட்ட தலைவர் எஸ்.பாலகுருநாதன் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்.  

     மாவட்ட கருத்தாளர் வா.சுரேஷ், லலிதாம் பிகை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர்  முத்துராஜா மற்றும் திருவாரூர், நன்னிலம், குட வாசல், கொரடாச்சேரி, கோட்டூர், திருத்து றைப்பூண்டி, வலங்கைமான் ஆகிய ஒன்றியங்க ளில் உள்ள 102 நடுநிலை, 19 உயர்நிலை, 18 மேல்நிலை மற்றும் 5 மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் 144 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

கரூர்

     இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு வழி காட்டி பயிற்சி முகாம் கரூர் மாவட்டம் குளித்த லையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கிருஷ்ணராயபுரம் வட்டாரக்  கல்வி அலுவலர் மீனா தலைமை வகித்தார். அறி வியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஜான்பாஷா,  மாநிலச் செயலாளர் எம்.தியாகராஜன் ஆகி யோர் மாநாட்டு நோக்கங்களை எடுத்துக் கூறி னர். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் ஆன்-லைன் பதிவு மற்றும் ஆய்வுகள் சமர்ப்பிப்பது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜ.ஜெயராஜ் கூறி னார். கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.சுமதி சிறப்புரையாற்றினார்.

     கரூர் கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் பசுபதிபாளையத்தில் நடை பெற்றது.