குழித்துறை, மார்ச் 29 குழித்துறை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு குழித்துறை ஆத்துக்கடவு பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்த தோப்பில் ஏராளமான தென்னை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. மேலும் அந்தப் பகுதியில் ஏராளமான செங்கல் சூலைகளும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தென்னந்தோப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது . இது குறித்து குழித்துறை தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இருப்பினும் அந்த பகுதியில் உள்ள சில மரங்கள் தீயில் கருகி நாச மாயின.