நாகர்கோவில், ஜன. 1- நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் புதிதாக ஏற்படுத்தி உள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளின் குளறுபடிகளால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடந்த ஒரு வார காலமாக திணறி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கும் அண்டை மாநிலமான கேரளத்திற்கும் பார்வதிபுரம் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வானங்கள் கடந்து செல்கின்றன. மற்ற மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை (என்எச் 47) பணிகள் நிறைவடைந்த போதிலும் குமரி மாவட்டத்தில் அப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் கடும் போக்கு வரத்து நெரிசலை சகடந்த பத்தாண்டு களுக்கும் மேலாக குமரி மாவட்ட மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். இதனி டையே ஏராளமான விபத்துகளும் உயிரிழப்பு களும் ஏற்பட்டு வருகின்றன. இதனிடையே 2018 இல் பார்வதிபுரம் மேம்பாலம் திறக்கப் பட்டது. இது வெளியூர் செல்லும் வாகனங் களுக்கு ஓரளவு தீர்வாக அமைந்தது. ஆனால், உள்ளூர் வாகனங்களுக்கும் பொது மக்களுக்கும் துயரமாக மறியுள்ளது இந்த பாலம். பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை 10 அடி அகலம் வரை சுருங்கியுள்ளதால் பேருந்து கள் 20 கிலோ மீட்டர் வேகத்தில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. அப்படியும் பல நேரங்க ளில் வாகனங்கள் அணிவகுத்து நி்ற்பதுண்டு. இங்குள்ள ஆற்றங் கரை சந்திப்பில் திருநெல்வேலி, வடசேரி செல்லும் வாகனங்கள் நேராகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும் பிரிந்தும் செல்கின்றன. ஆற்றின் வலது கரையில் உள்ள சாலையில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்சுகள் அடிக்கடி கடந்து செல்லும். அதே சாலை யின் எதிர் திசையில் பல்வேறு தனியார் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் சாரதா நகர், கணியாகுளம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த இடத்தில் 3 இருவழி சாலைகள், 3 ஆற்றங்கரை சாலைகள் என 9 வழித்தடங் கள் இணைகின்றன. இதனால் இந்த பகுதி யில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சாலையின் நடுவே இரும்பு தடுப்புகளை காவல்துறையினர் வைத்துள்ள னர். இது ஏற்கனவே, இருந்துவரும் நெருக்க டியை மேலும் அதிரிப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். பார்வதிபுரத்தில் உள்ள ஆற்றின் (அனந்தன் கால்வாய்) பாலத்தை விரிவு படுத்தியும் ஆக்கிரமிப்புகளை அகற்றியும் ரவுண்டானா அமைப்பதே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.