தஞ்சாவூர், ஜூலை 28-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை அட்லாண் டிக் சர்வதேச பள்ளியில், புதிய குளிரூட்டப் பட்ட மாணவ, மாணவியர் விடுதி திறப்பு விழா மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட் விருது பெற்ற மாணவிக்கு பாராட்டு - பரிசளிப்பு விழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைவர் எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் எம். சிலம்புச் செல்வன் வரவேற்றார். இந்த விழாவில், பேராவூரணி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி விடுதியை திறந்து வைத்தும், அட்லாண்டிக் பள்ளியில் யுகேஜி படிக்கும் மாணவி தன்விகா, வேதியியல் தனிமங்கள் 118-ஐயும், 3 நிமிடங்கள் 12 வினாடிகளில் சொல்லி சாதனை படைத்து, இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளார். அவரைப் பாராட்டிப் பேசினார்.