தஞ்சாவூர், ஆக.10- தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வியா ழக்கிழமை மாலை திறந்து வைத்தனர். இப்பூங்கா பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக் கப்பட்டு வந்தது. இதில் ரூ.7 கோடி மதிப்பில் சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், கதை முற்றம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இப்பூங்காவை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆகியோர் வியாழக்கிழமை திறந்து வைத்தனர். தொடர்ந்து, செய்தியாளர் களிடம் அமைச்சர் கே.என்.நேரு தெரிவிக்கையில், “தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா ரூ. 7 கோடியில் புதுப்பிக்கப் பட்டு திறக்கப்பட்டுள்ளது. இது, தஞ்சாவூர் மக்களுக்கு மிகப்பெரிய பொழுது போக்கு இடமாக இருக்கும். சிறுவர்கள், பெரியவர்களுக் கான நீச்சல் குளங்கள், கலையரங்கம் உள்ளிட்டவை உள்ளன. இப்பூங்கா வில் ஏற்கெனவே என்னென்ன இருந்த தோ, அவை அனைத்தும் மீண்டும் செய்து தரப்படும்” என்றார். விழாவில் மாவட்ட ஆட்சியர் பா.பிரி யங்கா பங்கஜம், நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே. ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), மேயர் சண்.ராம நாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாந கராட்சி ஆணையர் க.கண்ணன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.