districts

img

பாபநாசம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

பாபநாசம், டிச.1 - பாபநாசம் அருகே அம்மாப்பேட்டையை அடுத்த உடையார்கோயி லில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் தலைமை வகித்தார்.  பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யா மொழி, 510 பய னாளிகளுக்கு ரூ. 2,16,47, 241 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அரசு தலைமை கொறடா செழியன், அம்மாப்  பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோன்று பாபநா சத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 449  பயனாளிகளுக்கு ரூ.79, 67,389 மதிப்பிலான நலத்  திட்ட உதவிகளை வழங்கி னார். இதில் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹி ருல்லா, மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் உள்பட ஏராளமான பொது மக்கள், கட்சியினர், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

;