districts

img

பெரம்பலூரில் முடிவுற்ற பணிகளை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்

பெரம்பலூர், பிப்.10 - பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல் வேறு பகுதிகளில் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் சனிக் கிழமை பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக் கல் நாட்டி, முடிவுற்ற  பணிகளை போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சிக்கு ஆட்சியர் க.கற்பகம் தலைமை வகித்தார். பெரம் பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சி.ராஜேந் திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவிக்கையில், “பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம் பாட்டு நிதியின்கீழ் பெரம்பலூர் நகரம்,  துறையூர் சாலையின் நடுவே மின்விளக்கு கள் பொருத்தும் பணி, பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் புதிய இ-சேவை மையம் கட்டடம் கட்டும் பணி ஆகிய இரு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.  துறைமங்கலம் 7 ஆவது வார்டு ராஜா நகர்  2 ஆவது குறுக்குத் தெருவில் புதிய நியாய விலை கடை, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட வாலிகண்டபுரம் ஊராட்சி யில் அமைக்கப்பட்ட புதிய சிமெண்ட் சாலை, தேவையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்  பள்ளியில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை  கட்டிடம், கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் புதிய  நியாய விலை கடை, அரும்பாவூர் அரசு  மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட இரண்டு  வகுப்பறை கட்டடம் ஆகியவற்றின் பணிகள்  முடிந்து,  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன” என்றார்.  தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு புதிய  வழித்தட பேருந்துகளை துவக்கி வைத்தார்.