மயிலாடுதுறை ஜன.02- மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோவில், சீர்காழி, கொள்ளிடம் ஆகிய வட்டாரங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.2 கோடியே 25 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி தலைமை வகித்தார். பூம்புகார் சட்டமன்ற உறுப் பினர் நிவேதா எம்.முரு கன், சீர்காழி சட்டமன்ற உறுப் பினர் எம்.பன்னீர்செல்வம், கூடுதல் ஆட்சியர் முகம்மது சபீர் ஆலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோவில் ஒன்றியம் ,ஆக்கூர் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிய ளிப்பு திட்டம் சார்பில் ரூ.12 இலட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் உணவு தானி யக்கிடங்கு, சீர்காழி; வட்டா ரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி; திட்டம் சார்பில் பூம்புகார் ஊராட்சியில் ரூ.12 இலட் சத்து 70 ஆயிரம் மதிப்பீட் டில் உணவு தானியக் கிடங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு தியளிப்பு திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சார்பில் பூம்புகார் ஊராட்சியில் ரூ.42 இலட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலக கட்டிடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் சார்பில் புங்கனூர் ஊராட்சியில் ரூ.12 இலட்ச த்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் உணவு தானியக்கிடங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர் ச்சி திட்டம் சார்பில் பெரு மங்கலம்; ஊராட்சியில் ரூ.39 இலட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி செய லக கட்டிடம், என மொத்தம் ரூ.2 கோடியே 25 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை திரு.சிவ.வீ.மெய்ய நாதன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஷ்வரி,மாவட்ட ஊரா ட்சிக்குழு தலைவர் உமாமகேஷ்வரி சங்கர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல் ராஜ்,சீர்காழி ஒன்றியக் குழுத் தலைவர் .கமல ஜோதி தேவேந்திரன், கொள்ளிடம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபிரகாஷ் செம்பனார்கோவில் ஒன்றி யக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர்,சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாஸ்கரன்;, ஊராட்சிமன்ற தலைவர் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (செம்பனார்கோவில்) மீனா, (சீர்காழி) திருமுருகன், சர வணன், (கொள்ளிடம்) ஜான்சன், உமாசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.