புதுக்கோட்டை, ஆக.30 - புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வ கோட்டை ஒன்றியம், வெள்ளாளவிடுதி, மங்களாகோவிலில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம் நடைபெற்றது. சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, மக்க ளிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 11.7.2024 முதல் 10.9.2024 வரை 13 ஊராட்சி ஒன்றியங் களில் உள்ள 495 கிராம ஊராட்சிகளில் 66 ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி, மங்களாகோவில் சமுதா யக் கூடத்தில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாமை பார்வையிட்டு, மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவ ரங்கள் கேட்டறியப்பட்டன. எனவே பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது தொடர் புடைய அரசு அலுவலர்கள் உரிய பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும்” என்றார். பின்னர் அண்டனூர் ஊராட்சி, மஞ்சம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுர விளக்கி னையும், வெள்ளாள விடுதி ஊராட்சியில் புதி தாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலைய பய ணியர் நிழற்குடையினை யும், ஆதிதிராவிடர் தெருவில் புதிதாக அமைக் கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும் திறந்து வைத் தார். இந்நிகழ்வுகளில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத் துரை, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலை வர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், கந்தர்வ கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக் (எ) இரா.ரெத்தினவேல் உள்ளிட் டோர் பங்கேற்றனர். பொன்னமராவதி பொன்னமராவதி ஒன்றியம் காரையூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமை யில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வை யிட்டு ஆய்வு செய்து, பதிவு செய்யப்பட்ட மனுக்கள் குறித்து கேட்டறிந்தார். வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் பயனாளி களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கினார். இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வ நாயகி, ஒன்றியக் குழு தலைவர் சுதா அடைக்கலமணி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.