மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கரூர் மாநகராட்சி குளத்துப்பாளையம் குகைவழிப்பாதை முதல் புகழூர் சாலை மேம்பாலம் வரை அமைந்துள்ள அறிஞர் அண்ணா சாலையில் பொது நிதியில் ரூ.31 லட்சத்தில் அமைக்கப்பட்ட 50 மின் விளக்குகளை இயக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி, கரூர் மாநகராட்சி மேயர் வெ.கவிதா உள்ளிட்டோர்.