districts

img

சுகாதார நிலையம், மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

திருத்துறைப்பூண்டி, மே 15 - திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் கொட்டையூர் துணை சுகாதார நிலை யம் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள் ளதையும், திருத்துறைப்பூண்டி அரசு மருத்து வமனைக்கு ரூ.9 கோடி மதிப்பீட்டில் கூடுதல்  கட்டிடம் கட்டப்படுவதற்கான ஆயத்த பணி களையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய் தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி  கிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு. டி.எஸ்.செல்வவிநாயகம், திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர் கோ. பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். ரூ.9 கோடி மதிப்பீட்டில் திருத்துறைப் பூண்டி அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடம் 2184 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத் தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களில் அமையவுள்ள சிறு அறுவை சிகிச்சை அரங்கம், அறுவை சிகிச்சை பிரிவு,  நுண்கதிர் பரிவு, சி.டி.ஸ்கேன், அறுவை சிகிச்சைக்கு முன் மற்றும் பின் கவனிப்பு அறை, மருத்துவ வார்டு மற்றும் செவிலியர்  அறை ஆகியவற்றுடன் கூடிய அரசு மருத்துவ மனை கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான ஆயத்த பணிகளையும் அமைச்சர் மா.சுப்பிர மணியன் ஆய்வு செய்து, பொறியாளர்களிடம் கட்டுமான பணிகளின் முதற்கட்ட பணிகள்  தொடர்பாக கேட்டறிந்தார். கொரடாச்சேரி யில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற் கான கள ஆய்வையும் அமைச்சர் மேற்கொண் டார்.