தஞ்சாவூர், மார்ச் 3- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில், கொடுவா மீன் குஞ்சுகளை கடலுக்குள் விடும் நிகழ்ச்சி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மீன் குஞ்சுகளை கடலில் விட்டார். நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், திமுக தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் பழனிவேல், சேதுபாவாசத்திரம் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி. முத்துமாணிக்கம், மீனவர் நலவாரிய துணைத் தலைவர் மல்லிப்பட்டினம் தாஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில், மீன் வளத்துறை ஆணையர் கஜலட்சுமி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை (உள்நாட்டு மீன்வளம்) கூடுதல் இயக்குனர் ஜி.ஆறுமுகம், மீன் வளத்துறை உதவி இயக்குநர் ந.மணிகண்டன், மீன் வள ஆய்வாளர்கள் வி.ஆனந்த், க.ந.வீரமணி மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.