மயிலாடுதுறை, ஜூன் 24 -
மயிலாடுதுறை மாவட் டம், தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில், பரச லூர், மேமாத்தூர், கீழ்மாத் தூர், நல்லாடை, திருவிளை யாட்டம், கொத்தங்குடி, அரசூர், சங்கரன்பந்தல், இலுப்பூர், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, பொறையாறு, திருவிடைக் கழி, விசலூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் விவ சாயிகள் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்துள்ள னர்.
செம்பனார்கோவில் வட்டாரப் பகுதியில் மட்டும் 2,100 ஹெக்டேர் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள் ளது. தற்போது பூ பூத்து, காய் காய்த்து வெடித்த நிலையில், விவசாயிகள் அறுவடைப் பணியை தொ டங்கி உள்ளனர். தற்சமயம் நிலவி வரும் வறண்ட வானி லையால் பருத்திச் செடிகள் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. மாவுப் பூச்சியில் பப்பாளி மாவுப் பூச்சி இளம் மஞ்சள் நிறத் தில் காணப்படும். பருத்தி மாவுப்பூச்சி, இளஞ்சிவப்பு மாவுப்பூச்சி, வால் மாவுப் பூச்சி மிக முக்கியமானவை யாகும். இதனால் பருத்தி மகசூல் குறைந்து விடும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தகவ லறிந்த செம்பனார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையா, உதவி வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் வேளாண் குழுவினர் நல் லாடை பகுதிக்கு சென்று சப் பாத்தி மற்றும் மாவுப் பூச்சி பாதிக்கப்பட்ட பருத்தி வயலில் ஆய்வு மேற் கொண்டு விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி னர். அதனை தொடர்ந்து ட்ரோன் கேமரா மூலம் அப்பகுதி விவசாயிகள் முன் னிலையில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. இதில் திரளான பருத்தி விவ சாயிகள் கலந்து கொண்ட னர்.