districts

மே 19 தஞ்சாவூரில் வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூர், மே 15-  

   தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மே 19 (வெள்ளிக்கிழமை) நடை பெறவுள்ளது.  

   முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் அதிகமான  காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு  வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகி யோர் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறு வனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகா மில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள் ளலாம்.

  முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர  அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி  வாய்ப்பினை பெறலாம்.

   மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட  ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள் ளார்.