புதுக்கோட்டை, ஆக.11-
மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், தொடர்ந்து நடை பெற்று வரும் இனக்கல வரத்தை கண்டித்தும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் வெள்ளிக் கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றியச் ெயலாளர் அடைக்கலமேரி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி. சுசிலா, மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி, சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் ஆர்.வி.ராமையா உள் ளிட்டோர் கண்டன உரை யாற்றினர்.