திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றிய-நகரக் குழு சார்பில் மே தின சிறப்பு பேரவை நடைபெற்றது. ஒன்றிய தலைவர் என்.இடும்பையன் தலைமையில் நடந்த பேரவையில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் சிறப்புரையாற்றினார். தமுஎகச மாவட்டச் செயலாளர் ஜி.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கப்பட்டது.