தஞ்சாவூர், பிப்.13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்டக்குழு உறுப்பினர் என்.குருசாமியின் மகன், ஆசிரியர் கு.கார்த்திகேயன் புதன்கிழமையன்று அகால மரணம் அடைந்தார். தகவலறிந்த கட்சியின், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. இராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மூத்த தலைவர்கள் ஆர்.சி. பழனிவேலு, என். சீனிவாசன், ஜி. நீலமேகம், மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், மறைந்த கார்த்திகேயன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். என். குருசாமி உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.