districts

img

துவரங்குறிச்சி, கிருஷ்ணராயபுரத்தில் தியாகிகள் தின பொதுக் கூட்டம்

திருச்சிராப்பள்ளி/கரூர், ஜன.20 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,  தமிழ்நாடு விவசாய தொழிலா ளர்கள் சங்கம், இந்திய கட்டுமான சங்கம், சிஐடியு மற்றும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் துவ ரங்குறிச்சியில் வெள்ளியன்று தியா கிகள் தின நினைவுப் பொதுக் கூட்டம் நடந்தது.  கூட்டத்திற்கு சிஐடியு மருங்கா புரி வட்ட ஒருங்கிணைப்பாளர் அழ கர்சாமி தலைமை வகித்தார். தியா கிகளின் தியாகம், கொள்கை பிடிப்பு,  மன உறுதியை போற்றியும், அவர் களைப் பாராட்டியும், சிஐடியு திருச்சி  புறநகர் மாவட்டச் செயலாளர் சிவ ராஜ், மாவட்டத் தலைவர் சம்பத், விவ சாயிகள் சங்க தலைவர் சிதம்பரம், ஊரக உள்ளாட்சி சங்க செயலாளர் பன்னீர் செல்வம், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் தியாகராஜன், மணப்பாறை வட்ட சிஐடியு ஒருங் கிணைப்பாளர் சுரேஷ், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மணப்பாறை வட்டச் செயலாளர் சீனிவாசன், விவ சாய தொழிலாளர்கள் சங்க மருங்காபுரி வட்டச் செயலாளர் அண் ணாதுரை ஆகியோர் பேசினர். துவரங்குறிச்சி சிஐடியு ஆட்டோ சங்க தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார்.  கரூர் சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் கரூர் மாவட்டக் குழு  சார்பில் கரூர் மாவட்டம் கிருஷ்ண ராயபுரம் கடைவீதியில் தியாகிகள்  தின உறுதிமொழி ஏற்பு தெரு முனை கூட்டம், கலை நிகழ்ச்சி நடைபெற்றது.  கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க  மாவட்டத் தலைவர் கா.கந்தசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகே சன், வி.ச. மாவட்டச் செயலாளர் கே. சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளர் ஜி.தர்ம லிங்கம் ஆகியோர் பேசினர். வி.தொ.ச மாவட்டத் தலைவர் ஒ.கே.கண்ணதாசன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்கள், பொரு ளாளர் ப.சரவணன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். வி.ச மாவட் டப் பொருளாளர் கே.சுப்பிரமணி நன்றி கூறினார். கரூர் மாவட்ட கலைக் குழு சார்பில் வீதி நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.