புதுக்கோட்டை, பிப்.19 - நிதிநிலை அறிக்கையில் தொழிற் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை முதலமைச்சருக்கு நன்றி தெரி வித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்த தாவது: மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ள கந்தர்வகோட்டையில் இளைஞர் களுக்கு வேலை வாய்ப்புகளை உரு வாக்கும் வகையில் தொழிற்கல்வி வேண்டுமென்பது தொகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வந்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்துப் பேசியும், அமைச் சர்களை சந்தித்தும் வலியுறுத்தி வந்தேன். முதலமைச்சருக்கும் இது குறித்து கடிதம் கொடுத்துள்ளேன். இந்நிலையில், கந்தர்வகோட்டை யில் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் (industrial training institute) தொடங் கப்படும் என்று நிதிநிலை அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உரு வாக்கும் வகையிலான இந்த அறி விப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அறிவிப்புக்கு காரணமாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோ ருக்கு கந்தர்வகோட்டை தொகுதி மக்க ளின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தொகுதி மக்கள் நன்றி கந்தர்வகோட்டையில் அரசு தொழிற் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து கந்தர்வகோட்டையில் பொதுமக்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசு களை வெடித்தும் கொண்டாடினர். தொழிற்பயிற்சி நிறுவனம் கொண்டு வர அரும்பாடுபட்ட சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னத்துரைக்கு நன்றி தெரிவித்தும் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.