districts

திருச்சி முக்கிய செய்திகள்

இலக்கிய மன்ற நிறைவு விழா

பாபநாசம், பிப்.23 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இரும் புதலை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலை மையாசிரியர் கோபால் தலைமை வகித்தார். கணித  ஆசிரியர் ராஜராஜன் வர வேற்றார். பெற்றோர் ஆசி ரியர் கழகத் தலைவர் கனி மொழி, ஊராட்சி மன்றத் தலைவர் பாலாஜி முன் னிலை வகித்தனர். பல் வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற் றன. தமிழாசிரியர் சாந்த குமார் நன்றி கூறினார்

சிறப்பு கிராம சபை

பாபநாசம், பிப்.23- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே  கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடியில் 2022-23 நிதியாண்டிற் கான நூறு நாள் வேலைத் திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்  நடைபெற்றது.  கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். பாப நாசம் வட்டார சமூகத் தணிக்கை அலுவலர் சுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கப்பன், ஊராட்சி துணைத் தலைவர் இந்திரா  காந்தி, ஒன்றியக் கவுன்சி லர் சுமதி, உறுப்பினர்கள், கிராம மக்கள் பங்கேற்ற னர். இதில் 2022-23 நிதி யாண்டில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடந்த  பணிக்கான அறிக்கை மக்கள் மத்தியில் வைக்கப் பட்டு, விவாதிக்கப்பட்டது.

பாலப் பணியை விரைவுபடுத்துக! பிப்.26 இல் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பாபநாசம், பிப்.23 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் விரிவ டைந்த ஒன்றிய கிளைச் செயலாளர்கள் கூட்டம், தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் ஒன்றியக் குழு அலு வலகத்தில் நடந்தது.  கூட்டத் திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டக் குழு  உறுப்பினர் காதர் ஹுசேன்  பேசினர்.  நாடாளுமன்றத் தேர்த லில் மதச்சார்பற்ற கூட்ட ணியின் வெற்றிக்காகப் பணியாற்றுவது. அய்யம் பேட்டை பகுதியில் சாலை வசதி, மதகடி பஜார் பாலப் பணியை விரைவுபடுத்தக் கோரி பிப்ரவரி 26 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது. பாபநாசம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இடைத் தரகர்கள் ஆதிக்கம் செலுத் துவதை கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றி யச் செயலாளர் முரளி தரன், ஒன்றியக்குழு உறுப் பினர் ஜார்ஜ், கிளைச் செய லாளர் அருள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

பிளாஸ்டிக் பறிமுதல்

பாபநாசம், பிப்.23- தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் பேரூராட்சிக் குட்பட்ட வணிக நிறுவனங் களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்களின் பயன் பாடுகளை கண்டறிய சோதனை நடத்தப்பட்டது. இதில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடை உரிமையாளர்களுக்கு ரூ. 2500 அபராதம் விதிக்கப் பட்டது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவி ஷங்கர், சுகாதார ஆய்வா ளர் பரமசிவம் உள்ளிட் டோர் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில்  இன்று உள்ளூர் விடுமுறை 

தஞ்சாவூர், பிப்.23-  தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாசி மகத் திரு விழாவை முன்னிட்டு, அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை  அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 24.2.2024 (சனிக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் தஞ்சா வூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக் கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறி வித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட  ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

விசிக ஆர்ப்பாட்டம்

அரியலூர், பிப்.23 - வாக்குப் பதிவு இயந்திரத்துடன் நூறு சதவீதம் ஒப்புகைச்  சீட்டு இயந்திரத்தையும் இணைத்து தேர்தலை நடத்த வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் இரா.கதிர்வளவன் (கிழக்கு),  அங்கனூர் சிவா(மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாநில அமைப்புச் செயலர் கி.இளமாறன் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் உள்ளிட்ட கூட்டணி  கட்சியினர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்குமிடம் இன்று முதல் மாற்றம்

தஞ்சாவூர், பிப்.23-  தஞ்சாவூர் ரயில் நிலை யத்தில் மேம்பாட்டுப் பணி கள் நடைபெறுவதால், பய ணச்சீட்டு வழங்குமிடம் சனிக் கிழமை முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மேலா ளர் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில், “தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரயில்வே அமைச்சகத்தால் அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகள் பல்வேறு கட்டங்களாகத் திட்டமிட்ட படி உரிய காலத்தில் முடிக்கப்பட்டு வருகின்றன. இந்த மேம்பாட்டுப் பணி கள் காரணமாக முதன்மை நுழைவு வாயிலில் உள்ள பயணச்சீட்டு வழங்குமிடம், இரண்டாவது நுழைவு வாயி லுக்கு சனிக்கிழமை (பிப். 24) இடமாற்றம் செய்யப் படுகிறது. இந்த இடமாற்றத்தைப் பயணிகள், பொதுமக்கள் அறிந்து கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  கட்டுமானக் காலத்தில்  பணிகள் சுமூகமாக நடை பெறவும், பயணிகள் சேவை யில் இடையூறு ஏற்படு வதைத் தவிர்க்கவும் இந்தத்  தற்காலிக இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணி தவறவிட்ட நகைப் பை போலீசாரிடம் ஒப்படைப்பு ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

தஞ்சாவூர், பிப்.23- ஆட்டோவில் பயணி விட்டுச் சென்ற நகைப் பையை ஓட்டுநர் மீட்டு காவல்துறையினர் முன்னிலையில் வியாழக்கிழமை ஒப்படைத்தார். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சோழன் சிலை ஆட்டோ நிறுத்தத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனின் ஆட்டோவில், புதன் கிழமை 4 பேர் ரயில் நிலையத்துக்கு பயணம் செய்தனர். ரயில் நிலை யத்தில் இறங்கிய போது, கைப்பையை பயணிகள் விட்டுச் சென்றனர். இந்த கைப்பையை ஆட்டோ ஓட்டுநர் ராமச்சந்திரன், அழகு பாண்டியன், காமணன் ஆகியோர் பிரித்து பார்த்த போது, உடை களும், நகைகளும் இருந்தன. இந்தப் பையை மூவரும் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  இதுகுறித்து மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வி.சந்திரா விசாரித்த  போது, அந்த பை கேரளத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் உடையது என்பதும், தஞ்சாவூரில் நடைபெற்ற திருமணத்துக்கு வந்துவிட்டு மீண்டும்  எர்ணாகுளம் விரைவு ரயிலில் செல்வதற்கு, அவசரமாக சென்றபோது இந்தப் பையை தவறவிட்டதும் தெரிய வந்தது.  தொடர்ந்து காவல்துறையினர் முன்னிலையில், சோழன் சிலை  ஆட்டோ ஓட்டுநர்கள் புருஷோத்தமனிடம் இந்தப் பையை வியாழக் கிழமை ஒப்படைத்தனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர்கள் ராமச்சந்திரன், அழகு பாண்டியன், காமணன் ஆகியோரை காவல்துறையினர் பாராட்டினர்

108 ஆம்புலன்ஸ் டெக்னீசியன் பணிக்கு ஆட்கள் இன்று தேர்வு

தஞ்சாவூர், பிப்.23-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனை வளா கத்தில் அவசர சிகிச்சை கட்டிடத்தில் உள்ள 108 அலுவலகத்தில், பிப்.24 (சனிக்கிழமை) அன்று எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீசியன் பணிக்கு ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கும் நேர்காண லில் பி.எஸ்.சி., நர்சிங், A.N.M., G.N.M., D.M.L.T., டிப்ளமோ இன் பார்மசி, B.Sc மைக்ரோ பயாலஜி, விலங்கியல், தாவரவியல், பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, தாவர உயிரியல் போன்ற கல்வித் தகுதி உடையோர் பங்கேற்கலாம். மாதம் 16,020 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். 19 முதல் 30 வயதுக் குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். எழுத்துத் தேர்வு, அடிப்படை மருத்துவ அறிவு பரிசோதனை, மனித வளத்துறை நேர்காணல் நடத்தப் படும். தேர்ச்சி பெறுபவர்களுக்கு 50 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். வகுப் பறை, மருத்துவமனை, ஆம்புலன்ஸ் சார்ந்த பயிற்சி தரப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி வழங்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு வருவோர் அசல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும்.  கூடுதல் விபரங்களுக்கு, அலைபேசி எண்.7550208108-ஐ தொடர்பு  கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.  உலக அமைதி தினம் கடைப்பிடிப்பு அரியலூர், பிப். 23- அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக  அமைதி மற்றும் புரிந்து கொள்ளுதல் தினம் வெள்ளிக்கிழமை கடைப் பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை  தலைமை வகித்தார். அரியலூர் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்று நர் மீரா சிறப்புரையாற்றினார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி  பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். ஆசிரியர்கள்  மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

இடையாத்தி வேலாம்பட்டியில்  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரக் கோரிக்கை

தஞ்சாவூர், பிப்.23-  இடையாத்தி வேலாம்பட்டி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள, இடையாத்தி ஊராட்சி வேலாம்பட்டி கள்ளர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.  இந்த நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து விழும் நிலையில், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் இருந்தது. இதையடுத்து பேரா வூரணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு இத்தொட் டியை இடித்து விட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்து,  நேரடியாக மோட்டாரில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது.  புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்  கூறப்படுகிறது. எனவே வேலாம்பட்டி கள்ளர் தெருவில் புதிய மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய  அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஆதார் எடுக்கும் பணிகள்: அரசுப் பள்ளிகளில் தொடக்கம்

அரியலூர், பிப்.23 - அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ,  மாணவிகளுக்கு பள்ளியிலேயே ஆதார் எடுக்கும் பணி வெள்ளிக் கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. அரியலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆதார் எடுக்கும் சிறப்பு முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி தொடக்கி வைத்தார். இம்முகாமினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜபிரியன், பள்ளி தலைமையாசிரியர் உமா, பள்ளி ஆய்வாளர் பழனிசாமி மற்றும் எல்காட் நிறுவன பணியாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ரத்தக் காயங்களுடன் சிறுமி சடலம் மீட்பு: கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததா? தீவிர விசாரணை தேவை: சிபிஎம் கோரிக்கை

கும்பகோணம், பிப்.23- வண்டுவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், உடலில் ரத்தக்  காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது வண்டுவாஞ்சேரி கிராமம். இங்குள்ள காமராஜ் காலனி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி (பத்தாம் வகுப்பு  மாணவி) ஒருவர், மர்மமான முறையில் உட லில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதற்கு அருகில் அதே தெருவைச் சேர்ந்த  திலீபன் என்பவரும் தூக்கில் தொங்கிய வாறு சடலமாக இருந்துள்ளார்.  இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் நாச்சியார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் இரு  சடலங்களையும் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த முதல் கட்ட விசாரணை யில், “வண்டுவாஞ்சேரி கிராமம் காமராஜர் காலனியைச் சேர்ந்த திலீபன், பத்தாம் வகுப்பு  மாணவியை விரும்பியதாகவும், அவரை வியாழனன்று இரவு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று, பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்ற தும், பின்பு விவசாயக் கூலி வேலை செய்யும் திலீபன் தூக்கிட்டு தற்கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. ஆனால் இறந்த மாணவியின் உடல் முழு வதும் ரத்த காயங்கள் இருந்ததால், இவரை  கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனரா என அப்பகுதி மக்களி டையே சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அச்சிறுமியின் உடல் கூராய்வுக்காக தஞ்சா வூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட மாணவியை வற்புறுத்தி கூட்டு பாலியலில் ஈடு படுத்தி உள்ளனரா என சந்தேகம் எழுந்துள் ளது. எனவே அவரது உடற்கூறாய்வின் அடிப் படையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.