districts

img

பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி அமைச்சர்கள் அன்பில் மகேஸ், ராஜா பங்கேற்பு

திருவாரூர், ஆக.5 -

     திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட காட்டூர் கலைஞர்  கோட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் வளரிளம் பருவ மாணவர்களுக் கான மனநலம் மற்றும் வாழ்வியல் திறன்  பயிற்சி நடைபெற்றது.

   இதனை பள்ளி கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும்  வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் தொடங்கி வைத்த னர். மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, மாவட்ட தாட்கோ தலைவர் உ.மதிவா ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்  பூண்டி கே.கலைவாணன், மாவட்ட  ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணி யன் முன்னிலை வகித்தனர்.

     நிகழ்ச்சியில், திருவாரூர் பூண்டி செல்வம் நினைவு அறக்கட்டளையின் சார்பாக 2022-2023ஆம் கல்வியாண்டில்  10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முத லிடம் பிடித்த மாணவ, மாணவியர் களுக்கு தங்கப் பதக்கமும், பரிசுத்தொ கையும், 2023 ஆம் ஆண்டு நீட் தேர் வில் 7.5 சதவீத அரசு உள்ஒதுக்கீட் டில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள  மாணவ-மாணவியர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் மருத்துவ படிப்பிற்கு தேவையான உபகரணங்களையும் அமைச்சர்கள் வழங்கினர்.

    இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத் தின் கீழ், காட்டூர் மேல்நிலைப் பள்ளி யில் 5 பள்ளிகளைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 40 பேருக்கு மிதி வண்டிகளை, மாவட்ட ஆட்சியர் முன்னி லையில் அமைச்சர்கள் வழங்கினர்.

   மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் முனைவர் குமார், இயக்குநர் லதா, மாவட்ட வருவாய் அலுவலர் க.சண் முகநாதன், முதன்மை கல்வி அலுவலர்  புகழேந்தி, திருவாரூர் நகர்மன்ற தலை வர் புவனபிரியா செந்தில், கொரடாச் சேரி ஒன்றியக்குழு தலைவர் உமா பிரியா பாலசந்தர், துணைத்தலைவர் பாலசந்தர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கலியபெருமாள், காட்டூர் ஊராட்சிமன்ற தலைவர் விமலா மற்றும்  ஊராட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர்.