districts

img

ஒரத்தநாட்டில் சிஐடியு ஆட்டோ சங்க கிளை தொடக்கம்

தஞ்சாவூர், டிச.31 - தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு மருத்துவமனை அருகில் சிஐடியு ஆட்டோ சங்க கிளை துவக்கம் மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி, பெயர் பலகை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  ஆட்டோ சங்கத் தலைவர் ஜி.கருணாநிதி தலைமை வகித்தார். செயலாளர் ப.ரமேஷ் வரவேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். ஒரத்தநாடு அரசு மருத்துவமனை மருத்துவர் வெற்றிவேந்தன் சங்க பெயர்பு பலகையை திறந்து வைத்தார். நிறைவாக ஒன்றியப் பொருளாளர் இளையராஜா நன்றி கூறினார். ஆட்டோ சங்க துணைத் தலைவர்கள் ஆனந்தன், அரவிந்தன், துணைச் செயலாளர் குமார், இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். “லைட் பதிவு வைத்திருக்கும் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களையும் நலவாரியத்தில் இணைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.