கும்பகோணம், மே 7-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் முக்கியப் பகுதியான நாகேஸ்வரன் வடக்கு வீதி, கடைத்தெரு, பெரிய கடை தெரு, பெரியகாய்கறி மார்க்கெட் செல்லும் முக்கிய பகுதியான உச்சி பிள்ளையார் கோயில் அருகில் ஒளி வெளிச்சத்திற்காக மின்உயர் கோபுரமாக வைத்து ராட்சத விளக்கு மாநகராட்சி நிர்வகத்தால் பொருத்தப் பட்டு வெளிச்சம் பிரகாசமாக இருந்து வந்தது.
கும்பகோணத்தில் அண்மையில் நடைபெற்ற சாரங்கபாணி கோயில் தேரோட்டத்தின் போது அந்தப் பகுதியில் உள்ள மின் கோபுர விளக்கு இடையூறாக இருந்ததால் தற்காலிகமாக அப்புறபடுத்தப்பட்டது
தேரோட்ட நிகழ்ச்சி முடிந்து விட்ட நிலையில் மீண்டும் பயன்படுத்தும் பொழுது அதன் அடிப் பகுதி பலவீனமாக இருப்பது கண்டறியப் பட்டது.
கண்டறியப்பட்டு நாட்கள் உருண்டோடிக் கொண்டிருக்கிறது. பழுது சரி செய்யப்படவில்லை. இதனால் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதி இருளில் மூழ்கியுள்ளது. கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் உயர்கோபுர விளக்கை பழுது நீக்கி மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.