கும்பகோணம், அக்.27- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் 2023-24 ஆம் ஆண்டுக்கான கவின் கலைக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் ஆயில் கலர், ஆக்ரலிக் கலர், நீர் வண்ணம் ஆகிய ஊடு பொருட்கள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாண வர்களின் மரச் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், பூலோக சிற்பங்கள் ஆகி யவை பார்வைக்காக வைக்கப்பட் டிருந்தன. காட்சி வழித் தகவல் தொடர்பு துறையின் விழிப்புணர்வு போஸ்டர்கள், புகைப்படங்கள், பதிப் போவியக்கலை படைப்புகள், நெசவு கலை வடிவமைப்பு படைப்புகள் என மொத்தம் 206 படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. இவற்றை பார்வையிட்ட தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாணவர்களின் கலைத்திறமையை பாராட்டினார். கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவியர் களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கிப் பேசுகை யில், “மாணவர்களின் கவின் கலைப் பொருட்கள் மிக நன்றாக இருந்தது. குறிப்பாக குழந்தைகள் விளையாடு வது மற்றும் பழைய கதவு, அதில் பழமை வாய்ந்த பூட்டு என சிறப்பு வாய்ந்த ஓவியங்கள் இடம் பெற்றி ருந்தது. 140 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க கல்லூரியில் ஏராளமான திறமை யாளர்கள் உருவாக்கப்பட்டு இருக் கிறார்கள். இந்த மாணவர்களின் படைப்பாற்றல் மேலும் புகழ்பெறவும் அங்கீகாரம் பெறவும் வாழ்த்துகிறேன். கவின் கலை மாணவர்களுக்காக ஒரு நிறுவனம் தொடங்கி, அதன்மூலம் அவர்களின் படைப்புகளை சந்தைப் படுத்தலாம்” என்றார். நிகழ்ச்சியில் கவின் கலை கல்லூரி முதல்வர் (பொ) ப.ரா.ரவி முன்னிலை வகித்தார். முன்னதாக விரிவுரையாளர் பா.ராதா வரவேற்புரையாற்றினார். ம.சதீஷ்குமார் நன்றி கூறினார். கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா எஸ்.விஜயன், ராசராசன் கல்விக் கழகம் எஸ்.கே.ஸ்ரீதர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.